தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக நயன்தாரா, திரிஷா, ஆண்ட்ரியா என பல நடிகைகளும் சிறுவர் சிறுமிகளுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்கள். தங்களது கேரக்டருக்கு படத்தில் முக்கியத்துவம் இருப்பதால் இந்த மாதிரி வேடங்களை அவர்களாகவே விரும்பி ஏற்று நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், முதன்முறையாக ரெஜினாவும் ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமியுடன் நடிக்கும் புதிய படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.
கெளதம் கார்த்தியுடன் நடித்த மிஸ்டர் சந்திரமெளலி படத்திற்கு பிறகு எதிர்பார்த்தபடி புதிய படங்கள் கமிட்டாகாத நிலையில், இந்த படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் ரெஜினா, இதுவரையில்லாத அளவுக்கு இந்த படத்தில் நடிக்க கூடுதல் சம்பளம் பேசியிருக்கிறார்.
அதோடு, இந்த படத்தில் அவரது கேரக்டர் அரவிந்த்சாமிக்கு ஜோடி என்றபோதும், குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் காட்சிகளும் இடம்பெறுகிறதாம். இதன்காரணமாகவே இந்த படத்தில் நடிக்க சில நடிகைகள் மறுத்து வந்த நிலையில், தான் எதிர்பார்த்த சம்பளம் கிடைத்ததால் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் இந்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ரெஜினா.