'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கெளதம்மேனன் இயக்கிய மின்னலே படத்தில் ஒளிப்பதிவாளரானவர் ஆர்.டி.ராஜசேகர். அதன்பிறகு குறுகிய காலத்தில் முன்னணி ஒளிப்பதிவாளராகி விட்ட அவர், தற்போது நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.டி.ராஜசேகர் பேசும்போது, சில படங்களில் நான் ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கிய காட்சிகள் படம் வெளியாகும்போது கத்தரிக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நமக்கு பெயர் வாங்கித்தரும் என்று நான் எதிர்பார்க்கும் காட்சிகள் படத்தில் இல்லாமல் போயிருக்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் இந்த இமைக்கா நொடிகள் படத்தின் எடிட்டர் அப்படி செய்யவில்லை. அழகியலான காட்சிகளில் அவர் கைவைக்கவில்லை என்று சொன்னார்.
மேலும், எனக்குத் தெரிந்தது வரை நயன்தாரா ஒரு தனித்துவமான நடிகை. கேமராவின் நுட்பங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தனது நடிப்பை பிரதிபலிக்கக்கூடியவர். அவர் நடிக்கும் காட்சிகளை படமாக்குவதே ஒரு இனிமையான அனுபவம்தான் என்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.