தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தமிழில் அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக செளரியா நாயகனாக நடித்திருந்தார். அந்த படம் வெளியான நேரத்தில் சாய்பல்லவி தன்னுடன் நடிக்கும் சக நடிகர் நடிகைகளை மதிப்பதில்லை. அவருக்கு ஈகோ அதிகம் என்று பேட்டிகளில் கூறி வந்தார் நாக செளரியா. இதனால் அதன்பிறகு சாய்பல்லவியுடன் நடிப்பதற்கு மற்ற தெலுங்கு நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் நாக செளரியா அளித்த ஒரு பேட்டியில், மீண்டும் சாய் பல்லவியுடன் நடிப்பீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், தியா படத்தில் சாய் பல்லவிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இனிமேல் அந்தமாதிரியான கதையில் நடிக்க மாட்டேன்.
ஹீரோவுக்கும் முக்கியத்துவமுள்ள நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக மீண்டும் சாய் பல்லவியுடன் இணைந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் நாக செளரியா.