ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒவ்வொரு வாரமும் நான்கைந்து படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவரும் சூழ்நிலை உருவாகிவிட்டது. ஒரு சில படங்களைத் தவிர மற்ற படங்களின் ஓடும் காலம் சில நாட்கள் என்றும் சுருங்கிவிட்டன. வெள்ளிக்கிழமை படம் வெளியானால் அன்றும், அடுத்த இரண்டு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே ஒரு படத்தின் வசூல் சிறப்பாக இருக்கிறது. படம் நன்றாக இருந்தால் மட்டுமே அதற்கடுத்த நாட்களிலும் வசூல் இருக்கிறது. இல்லையென்றால் மாநகரங்களைத் தவிர பல ஊர்களில் அந்தப் படங்கள் தியேட்டர்களில் இருப்பதில்லை. இதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.
கடந்த வாரம் ஆகஸ்ட் 17ம் தேதி நான்கு படங்கள் வெளிவந்தன. இந்த வாரம் ஆகஸ்ட் 24ம் தேதியும் நான்கு படங்கள் வெளிவர உள்ளன. பிரபுதேவா நடிக்கும் 'லக்ஷ்மி', சத்யராஜ், வரலட்சுமி நடிக்கும் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்', விஜய் சேதுபதி தயாரிப்பில் 'மேற்குத் தொடர்ச்சி மலை', கிருஷ்ணா, வித்யா நடிப்பில் 'களரி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் ஓடினாலும், ஓடவில்லை என்றாலும் அடுத்த வாரம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு 5 படங்கள் வெளிவரத் தயாராக உள்ளன.
'ஆண் தேவதை, அண்ணணுக்கு ஜே, ஆருத்ரா, நரகாசூரன், 60 வயது மாநிறம்' ஆகிய ஐந்து படங்கள் 31ம் தேதி வெளிவர உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. 'இமைக்கா நொடிகள்' படம் மட்டும் இழுபறியாக உள்ளது. செப்டம்பர் மாதத்திலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து படங்கள் வெளிவர உள்ளன.