டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் கொட்டிதீர்த்து வரும் கனமழையால் 300 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் சிக்கி உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அங்கு விரைந்துள்ள சமூக ஆர்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வருகிறார்கள்.
அதோடு, ஏராளமானோர் வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், கேரளாவைசேர்ந்தவரான நடிகை அமலாபாலும் களமிறங்கி நிவாரண உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பின்போது அவரது கையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தார். ஆனபோதும் அதை பொருட்படுத்தாமல் அவர் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருப்பதால் அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.