அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
உதயா நாயகனாக நடித்துள்ள படம் உத்தரவு மகாராஜா. இந்த படத்தில் பிரபு, கோவை சரளா, மனோபாலா, குட்டி பத்மினி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில், திரையுலகினர் திரளாக கலந்து கொண்டனர்.
18 ஆண்டுகளுக்குப்பிறகு நடிகை குட்டி பத்மினி இந்தப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக நடித்தவர் குட்டி பத்மினி. ஆனால் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கிய அவர், தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இந்நிலையில், தற்போது உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் குட்டி பத்மினி.
இந்த படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், உத்தரவு மகாராஜா படத்தில் உதயாவின் அம்மாவாக நடித்துள்ளேன். கிராமத்தில் இஸ்திரி வண்டி தள்ளும் பெண் வேடம். ஏசியிலேயே இருந்து பழகிவிட்ட நான், இந்த படத்திற்காக வெயிலில் நின்று வியர்வை சிந்தி நடித்தேன். இனிமேல் நல்ல படங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்றார் குட்டி பத்மினி.
அதையடுத்து இந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு கடைக்குட்டி சிங்கம் கார்த்தியும் வந்திருந்தார். அப்போது அவரைப்பார்த்து, கார்த்திக்கு அம்மாவாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்த வாய்ப்பினை கார்த்தி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் மேடையில் நின்றபடியே அவரிடம் கேட்டுக் கொண்டார் குட்டி பத்மினி.