கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
துருவங்கள் 16 படத்தின் மூலம் புகழ்பெற்றவர் கார்த்திக் நரேன். 22வது வயதில் ஒரு ஹிட் படம் கொடுத்ததன் மூலம் அனைவராலும் பாராட்டப்பட்டார். யாரிடமும் சினிமா கற்காத கார்த்திக் நரேன், இயக்குனர் கவுதம் மேனனை மானசீக குருவாக கொண்டிருப்பதாக கூறினார். அந்தப் படத்தை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், அவரை பாராட்டியதோடு அவரது அடுத்த படத்தை தானே தயாரிப்பாதாக கூறினார். அதன்படி கவுதம் மேனன் தயாரிப்பில் தொடங்கப்பட்டது தான் நரகாசூரன். இதுவும் துருவங்கள் 16 போன்றே ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்.
இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், அஷ்மிதா, இந்திரஜித், ஆத்மிகா நடித்தனர். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்தார், ரோன் ஏதன் யோகன் இசை அமைத்தார். முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் கவுதம் மேனனால் படத்தை தொடர முடியவில்லை. அவருக்கு பொருளாதார சிக்கல். இது தொடர்பாக இயக்குனர் கவுதம் மேனனுக்கும், கார்த்திக் நரேனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் நின்றது.
சில மாதங்களுக்கு பிறகு பத்ரி கஸ்தூரி என்ற தயாரிப்பாளரைக் கொண்டு படத்தை முடித்தார் கார்த்திக் நரேன். பட வெளியீடு தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில், தற்போது வருகிற 31ந் தேதி படம் வெளிவர இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.