தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த வருடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் செய்யப்பட்டு மூன்றுமாத சிறைவாசத்திற்குப்பின் ஜாமினில் விடுதலையானார். இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் ஒரு பகுதியாக சில வேலைகளை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நடிகை கடத்தப்பட்ட சமயத்தில் காருக்குள் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய தனக்கு ஒரு வீடியோ பிரதி தருமாறு கடந்த பிப்ரவரி மாதம் அங்கமாலி நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்தார்.
ஆனால் நீதிமன்றம் திலீப்பின் கோரிக்கையை நிராகரித்தது. அதேசமயம் வீடியோக்கள் தவிர மற்ற சில ஆதாரங்களின் பிரதியை திலீப்பிற்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து கேரளா உயர்நீதிமன்றத்தில் திலீப் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதற்கு முன்னதாக அங்காமலி நீதிமன்றம் கூறிய அதே கருத்தை மேற்கோள் கட்டி திலீப்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
இதுபோக இன்னொரு பக்கம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என திலீப் கோரிக்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.