'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், அருண் விஜய், சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என மிகப்பெரும் நட்சத்திரக்கூட்டமே நடித்துள்ள படம் - 'செக்கச் சிவந்த வானம்'.
லைகா புரொடக்ஷன்ஸுக்கு பர்ஸ்ட்காப்பி அடிப்படையில் மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ள படம். செக்கச் சிவந்த வானம் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் பாடல்களை மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
படம் இன்னும் தணிக்கைக்கே அனுப்பப்படவில்லை. அதற்குள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதாவது செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தணிக்கைக்கு முன்னதாக படத்தின் வெளியீட்டு தேதியை லைகா அறிவிக்க என்ன காரணம்?
காலா படத்தை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் ரீபண்ட் கேட்டு பிரச்சனை செய்வதால், அவர்களை சமாதானப்படுத்துவதற்காகவே செக்கச் சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
அதாவது கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம் படங்களை குறைந்தவிலைக்கு தருவதாக ஏற்கனவே காலா பட விநியோகஸ்தர்களுக்கு வாக்கு கொடுக்கப்பட்டுள்ளது.