சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்ட்ட் அம்மா சரண்யா பொன்வண்ணன். எல்லா படத்திலேயும் அம்மாவாவே நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு. ஆனால், "நான் அம்மா கேரக்டர்களில் நடித்தாலும் எனக்கென்று வெவ்வேறு குணாதியசங்கள் கொண்ட அம்மா கேரக்டர்களை உருவாக்குகிறார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி தான். கடவுளின் அருளாலும் இயக்குனர்களின் கருணையாலும் விதவிதமான அம்மா கேரக்டர்களில் நடிக்கிறேன் என்கிறார்" சரண்யா.
அவர் தற்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்திலும் வித்தியாசமான அம்மாவாக நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இந்தப்படத்துல ஒரு சாதாரண, அன்றாடம் பிரச்சனைகளை சந்திக்கிற, ஏழ்மையான வீட்டு பெண்ணாகத்தான் நடிச்சிருக்கேன். ஆனாலும் என் கேரக்டரை ரொம்ப அழகா வடிவமைச்சிருக்கிறார் இயக்குனர் ராகேஷ். படத்துல நடிக்கும்போதே அந்த வித்தியாசம் தெரிஞ்சது. டப்பிங் பேசும்போது பார்த்தப்ப இன்னும் அசந்து போயிட்டேன். இந்த கேரக்டர் கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்னு தான் சொல்வேன். என்கிறார் சரண்யா.