'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தற்போது ஆண் தேவதை படத்தில் நடித்துள்ளார். ஆண் தேவதை படத்திற்காக மற்ற படங்களை ஒப்புக் கொள்ளாமல் இருந்த ரம்யா பாண்டியன், ஆண் தேவதை படம் தான் என் சினிமா வாழ்க்கையை தீர்மானிக்கும் என்கிறார். அவர் மேலும் கூறியதாவது:
ஜோக்கர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சமுத்திரக்கனி தான், ஆண் தேவதை படம் பற்றி சொல்லி, அதில் நடிக்க அழைத்தார். அதன்பின் இயக்குனர் தாமிராவும் படத்தின் கதையையும் கேரக்டரையும் விரிவாக சொல்லவே, இந்தப்படத்திற்குள் உடனடியாக வந்துவிட்டேன்.
என்னோட நடிப்பை பாராட்டி படப்பிடிப்பு தளத்திலேயே பணமுடிப்பு பரிசு தந்தார்கள். அதை என்னால மறக்கவே முடியாது. அதுமட்டுமல்ல, டப்பிங் பேசியபோதும் அதுபோல ரெண்டு தடவை பணமுடிப்பு வாங்கினேன்.
ஐடியில் வேலைக்கு போகிற சாதாரண பெண்ணாக நடித்திருக்கிறேன். ஆண் தேவதை படம் ரம்யா பாண்டியனை முழுமையாக வெளிப்படுத்தும் . ஏன் என்றால் ஜோக்கர் படம் வந்த சமயம் ரம்யா பாண்டியனா நான் வெளியே தெரியவில்லை. நிறைய பேர் நம்பவில்லை. அவ்வளவு ஏன் இயக்குனர் பா.ரஞ்சித் கூட படம் வெளியாகி ஒரு வருஷம் வரைக்கும் நான் ஏதோ பெங்காலி பொண்ணு என்று தான் நினைத்தார். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் மூலமாக உண்மை தெரிஞ்சதும் என்னை கூப்பிட்டு ரொம்பவே பாராட்டினார்.
இந்தப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே சில படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் இந்தப்படம் வெளியான பின், எனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என்பதால் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. இந்தப்படம் வெளியான பின்னர் நான் இன்னும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிவேன். ஆண் தேவதைக்கு அடுத்து என்னவிதமான படம், கேரக்டர் பண்ணப்போறோம்னு எதுவும் தீர்மானிக்கலை. ஆனால் என் சினிமா கேரியரை தீர்மானிக்கிற படமாக ஆண்தேவதை இருக்கும். என்கிறார் ரம்யா பாண்டியன்.