அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி பெரும் வசூலை கொடுத்த படம் ஆர்.எக்ஸ்.100. இதில் கார்த்திகேய கும்மகொண்டா, பாயல் ராஜ்புத் நடித்திருந்தனர். அஜய் பாகுபதி இயக்கி இருந்தார். இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில் கார்த்திகேயா நடித்த கேரக்டரில் ஆதி நடிக்கிறார். மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் படங்களில் நடித்த ஆதி, சமீபகாலமாக தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனர் மகேஷ் கோவிந்தராஜ் பெற்று உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
"நடிகர் ஆதியுடன் எனக்கு நீண்ட நாட்களாக பழக்கம். நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ஆசை எங்கள் இருவருக்கும் இருந்தது. ஆனால் அதற்கேற்ற கதை கிடைக்கவில்லை. இதே நேரத்தில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்ற படம் வெளி வந்து பல சாதனைகளை முறியடித்து ஓடிக் கொண்டு இருந்தது. ஆதி என்னை அழைத்து படம் பார்க்க சொன்னார். எங்கள் இருவருக்கும் படம் மிகவும் பிடித்து இருந்தது.
தமிழ் உரிமை வாங்க ஏகப்பட்ட போட்டி. தீவிர முயற்சியுடன் இந்தப் படத்தின் உரிமையை நான் பெற்றுக் கொண்டேன். இயக்குனர், கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. செப்டம்பர் மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. என்றார் தயாரிப்பாளர் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.