சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் விளம்பர படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு ஜவுளிக்கடை விளம்பரத்தில் ராட்டையில் நூல் நூற்பது போன்று நடித்தார். இதற்கு கேரள மாநில காதி வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து கேரள காதி வாரிய தலைவர் ஷோபனா ராஜ் கூறியதாவது:
ராட்டை நமது தேசிய அடையாளம். காந்தியத்தின் அடையாளம். ராட்டை மூலம் காதி துணிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஆனால் காதிக்கும், ராட்டைக்கும் தொடர்பே இல்லாத ஒரு விளம்பரத்தில் மோகன்லால் ராட்டையை பயன்படுத்தி நடித்திருக்கிறார். இதன் மூலம் ராட்டை குறித்து மக்களிடம் தவறான புரிதல் ஏற்படும். காதி துணிகள் என்ற பெயரில் போலி துணிகள் வியாபாரத்துக்கு வரும் ஆபத்து உள்ளது. இதையட்டி, மோகன்லாலுக்கும், கடை நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.