டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'நரகாசூரன்'. அர்விந்த் சாமி, சந்தீப், ஆத்மிகா, ஸ்ரேயா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் தயாரித்து வந்தார்.
ஆனால், தொடர்ந்து படத்தை முடிக்காமல் அவர் தாமதம் செய்ததால் கார்த்திக் நரேன் கடுப்பாகி தகராறில் ஈடுபட்டார். எனவே வேறு வழியில்லாமல் நரகாசூரன் படத்தயாரிப்பிலிருந்து கவுதம் மேனன் விலகிக் கொண்டார். தற்போது அந்தப்படத்தை ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளது.
இந்நிலையில், நரகாசூரன் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி 'நரகாசூரன்' படம் உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ரிலீஸ் செய்யும் நேரத்தில் யாரும் பஞ்சாயத்து பண்ணாமல் இருக்க வேண்டும் என கலக்கத்தில் உள்ளார் கார்த்திக் நரேன்.