பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துருவங்கள் 16 படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, சந்தீப்கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆகஸ்ட் 31-ந்தேதி வெளியாகிறது.
இந்த படத்தின் டிலைர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பட நாயகன் அரவிந்த்சாமி பேசுகையில்,
இந்த படத்தில் நடிப்பதற்கு கார்த்திக் நரேன் என்னை சந்தித்தபோது, எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் கதைக்குள் நான் வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அந்த வகையில் இந்த சஸ்பென்ஸ் திரில்லர் கதையை நன்றாக படமாக்கியிருக்கிறார் அவர்.
என்னுடன் சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி, ஸ்ரேயா, ஆத்மிகா என பலரும் நடித்திருக்கிறார்கள். அவரவர் வேலையை அழகாக செய்திருக்கிறார்கள். அதனால் படமும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.
நான் ஏற்கனவே சொன்னது போன்று, கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு. அவர் நிறைய வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுப்பார் என்றார்.