தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்து விட்ட சூர்யா, அதையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் தனது 37-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், திடீரென்று செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு என்று செய்திகள் பரவியதை அடுத்து, என்ஜிகே படப்பிடிப்பு மீண்டும் தொடங்க தாமதமானால் படம் தீபாவளிக்கு வெளிவருவது கடினம் என்கிற செய்திகள் பரவியது.
ஆனால், அதையடுத்து தான் மருத்துவமனைக்கு சாதாரண செக் அப்பிற்கு சென்றதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்ட செல்வராகவன், விரைவில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகி விட்டார்.
மேலும், செல்வராகவன், கே.வி.ஆனந்த் படங்களை முடித்த பிறகு இறுதிச்சுற்று சுதா இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. தற்போது இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கியிருக்கிறது.
உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருப்பதாக சூர்யா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.