பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சந்தானத்தின் நிலைமை புலிவாலைப்பிடித்த கதையாகிவிட்டது. காமெடியனாக நடித்து வந்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோக்களைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். காமெடியனாக மிகப்பெரிய உயரத்தில் இருந்தவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டதால் இப்போது கடும் சிக்கலில் இருக்கிறார்.
அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெளியான சக்கப்போடு போடு ராஜா படம் ஏற்படுத்திய நஷ்டம் ஒருபக்கம், அந்தப்படத்தினால் நஷ்டம் அடைந்தவர்களுக்கு இரண்டரை கோடி திருப்பிக்கொடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார் சந்தானம்.
அதனால் அவருடைய படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடித்துவருகிறது. சர்வர் சுந்தரம் படம் கூட வெளிவராமல் முடங்கிப்போனதன் காரணம் இதுவே.
இந்த நிலையில் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து வெளியிட முடிவு செய்துள்ளார். இந்த படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மார்ச் மாதம் 1-ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கியது. 'தில்லுக்கு இரண்டாம் பாகத்தில் தீப்தி என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இப்போது கேரளாவைச் சேர்ந்த ஏற்கெனவே சில மலையாள படங்களில் நடித்துள்ள ஷ்ரதா சிவதாஸ் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கதைப்படி கதாநாயகி கேரக்டர் மலையாளம் பேசுவதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதால் மலையாள நடிகையான ஷ்ரதா சிவதாஸை தேர்வு செய்துள்ளனர்.