ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.எல்.விஜய்யின் தியா படத்தில் நடித்தபோது, சாய்பல்லவி நட்பாக பழகவில்லை. ஸ்பாட்டில் ரொம்ப அலட்சியமாக நடந்து கொண்டார் என்று அந்த படத்தின் நாயகன் நாக செளரியா, சாய்பல்லவி மீது புகார் சொல்லி வந்தார். அதனால் சாய்பல்லவியின் பெயர் சினிமா வட்டாரங்களில் டேமேஜ் ஆனது.
அதையடுத்து, நான் யாரையும் அலட்சியப்படுத்தவில்லை என்று சாய்பல்லவி பேட்டிகளில் தெரிவித்து வந்தார். அதையடுத்து தற்போது எந்த ஸ்பாட்டிற்கு சென்றாலும் படக்குழுவுடன் ஒரு விசிட் அடித்துவிட்டு தான், அடுத்தகட்ட வேலைகளில் இறங்குகிறாராம் சாய்பல்லவி.
அதோடு,சமீபத்தில் பாடி பாடி லேசி மனசு என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்றபோது, தனது காலில் அடிபட்டபோதும், ஸ்பாட்டை விட்டு வெளியேறாமல் படப்பிடிப்பு முடியும் வரை வலியை பொறுத்துக்கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் சாய்பல்லவி. சாய் பல்லவியின் அந்த அர்ப்பணிப்பை அந்த ஸ்பாட்டில் இருந்த அனைவருமே வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.