டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹிந்தியில் 2014ம் ஆண்டில் கங்கனா ரணவத் நடித்து வெளிவந்த 'குயின்' படம், நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அந்தப் படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ரீமேக் செய்து தயாரித்து வருகின்றனர். அந்த நான்கு படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது. அடுத்து இறுதிக் கட்டப் பணிகள் முடிவடைந்ததும் அக்டோபர் மாதத்தில் படத்தை வெளியிட உள்ளார்கள்.
தமிழில் 'பாரிஸ் பாரிஸ்', தெலுங்கில் 'மகாலட்சுமி', கன்னடத்தில் 'பட்டர்பிளை', மலையாளத்தில் 'ஜாம் ஜாம்' எனப் பெயர் வைத்துள்ளார்கள். தெலுங்குப் படமான 'மகாலட்சுமி' படத்தையும், மலையாளப் படமான 'ஜாம் ஜாம்' படத்தையும் நீலகண்டா இயக்கி வந்தார். ஆனால், அவருக்கும், தமன்னாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதால் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பின்னர் நீலகண்டாவுக்குப் பதிலாக பிரசாந்த் வர்மா படத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னரே படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. ஆனால், இந்த பிரச்சினை விவகாரம் பற்றிய உண்மை நிலவரம் வெளியில் வரவில்லை.
எப்படியோ, ஒரு வழியாக நான்கு மொழிகளின் படப்பிடிப்பையும் ஒருசேர முடித்துவிட்டார்கள். 'குயின்' படத்தின் தென்னிந்திய ரீமேக்கில் மற்ற நாயகிகள் எப்படியோ ஆனால், 'மகாலட்சுமி' ஆக அந்தக் கதாபாத்திரத்திற்கு, மிகவும் பொருத்தமாக தமன்னா இருக்கிறார் என தெலுங்குத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.