'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
சாமி படத்திற்கு பிறகு விக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள படம் சாமி-2. நாயகிகளாக கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். சூரி காமெடி செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை விழா நேற்று நடை பெற்றது.
இந்த விழாவில் கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ஹரியின் இயக்கத்தில் நான் நடிக்கும் முதல் படம் இது. அவரது படப்பிடிப்பு தளம் எப்போதுமே எனர்ஜியாக, பரபரப்பாக இருக்கும். அவரிடமுள்ள அந்த பரபரப்பு அனைவரையுமே தொற்றிக்கொள்கிறது. அதனால், ஒவ்வொருவருமே அவரவர் வேலைகளில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.
முக்கியமாக விக்ரம் சார், தான் மட்டுமின்றி தன்னுடன் நடிப்பவர்களும் நடிப்பில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் நடிப்பில் அனைவருக்குமே அவர் உதவி செய்கிறார். ஒரே வார்த்தையில் சொன்னால் ஒரு ஆசிரியர் போன்று செயல்படுகிறார் விக்ரம்.