இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் பட இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியில் பயன்படுத்திக் கொண்டு விட்டு, பின், ஏமாற்றி விட்டதாக, பரபரப்பாக பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
தெலுங்குப் பட உலகைச் சேர்ந்தவர்களைப் பற்றி தாறுமாறாகப் பேட்டிக் கொடுத்து, பட உலகினரை கிடுகிடுக்க வைத்தவர், தற்போது, தமிழ் பட உலகினர் மீது கவனம் செலுத்தத் துவங்கி இருப்பது, கோலிவுட் வட்டாரத்தையும் கிடுகிடுக்க வைத்தது. முருகதாஸ், ராகவா லாரன்ஸ் என பலரும் தன்னோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றியவர்கள் என பட்டியலிட்டவர், அடுத்தடுத்தும் லிஸ்ட்களை வெளியிடுவேன் என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
இது மட்டுமல்ல; படுக்கையை பகிர்ந்து கொண்டபோது, நடிகர்களும், இயக்குநர்களும் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் என்று, படு ஆபாசமாகவும் பேட்டிக் கொடுத்து வருகிறார். யூடியூப் சேனல்களில் அவரது பேட்டி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
இதனால், கோபமடைந்திருக்கும் தமிழ் பட உலகினர், ஸ்ரீரெட்டியை அடக்குவது எப்படி என புரியாமல் அமைதியாக உள்ளனர். இருந்தாலும், ஸ்ரீரெட்டியை எப்படியாவது கட்டுப்படுத்தியாக வேண்டும் என்றும் நினைக்கின்றனர். போலீசில் புகார் என்று போனால், தன்னைப் பற்றிய ரகசியங்களையும் ஸ்ரீரெட்டி வெளியிட்டு விடுவாரோ என்றும் பலரும் அஞ்சி அமைதியாகி விட்டனர்.
இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி மீது புகார் கொடுக்கத் தயார் என, சினிமா தயாரிப்பாளர் ஏ.ஆர்.பிரபு முன்வர, அவரை வைத்து, ஸ்ரீரெட்டி மீது, போலீசில் புகார் கொடுக்க ஏற்பாடாகி உள்ளது. விரைவில், பிரபு, நடிகை ஸ்ரீரெட்டி மீது ஆபாசத்தை பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு, போலீசில் புகார் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.