இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர கேட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தன்னை பயன்படுத்தியவர்கள் ஒரு ரூபாய் கூட தராமல் ஏமாற்றி விட்டனர் என்றார். விரைவில் தமிழகத்தில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ள அவர் சென்னையில் அளித்த பேட்டி:
பக்திமிக்க குடும்பம்
நான் விஜயவாடாவை சேர்ந்தவள். என் பெற்றோர் ரொம்ப ஆச்சாரமானவர்கள். பக்திமிக்க குடும்பம் எங்களுடையது. என் தந்தை மூன்று கோயிலுக்கு தர்மகர்த்தாவாகவும் உள்ளார். எனக்கு சினிமாவில் எந்த பின்னணியும் இல்லை. நான் லிப்ஸ்டிக், நகபாலீஷ் வைத்தால் கூட வீட்டில் பெற்றோர் திட்டுவர். பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்தேன். அப்போது வந்த வாடிக்கையாளர் ஒருவர் என் அழகை பார்த்து, ஊடகத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
தல ரசிகை
அதனால் பெற்றோர் அனுமதியுடன் ஐதராபாத்தில் வேலைக்கு சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் தெலுங்கில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்தேன். அப்போது சூர்யா உள்ளிட்ட நிறைய பேரை பேட்டி எடுத்துள்ளேன். நான் அப்போது சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. இப்போது தல ரசிகை.
பெற்றோரை பிரிந்தேன்
என் தோழிகள் நிறைய பேர், நடிகைகளின் ரசிகையாக இருந்ததை பார்த்தேன். நானும் நடிகையாக முடிவு எடுத்தேன். ஒரு இயக்குனர் என் புகைப்படங்களை பார்த்து நடிக்க வாய்ப்பு தந்தார். 2வது நாயகியாக நடித்தேன். அதன் பின் படங்கள் தொடர்ந்தன. கிளாமர் நடிகையாக பெயர் கிடைத்தாலும், பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. நான் சினிமாவில் நடித்ததால், 10 ஆண்டுகளுக்கு முன்பே என் பெற்றோரை பிரிந்து வந்து விட்டேன்.
படுக்கையை பகிர்வதையே குறி
சினிமாவில் என் திறமையை நிருபிக்க வேண்டும் என விரும்பினேன். வாய்ப்பு வரும் என காத்திருந்தேன். ஆனால் அனைவரும் என்னை படுக்கையில் பயன்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டனர்.
முகத்திரையை கிழிக்க வேண்டும்
அதனால், அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என எண்ணினேன். அத்துடன் அனைத்து துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை இருக்கிறது. இதுகுறித்தும் விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காகவே வெளிப்படையாக இறங்கி வந்துள்ளேன்.
காமப்பார்வை
சாலையில் ஒரு சின்ன பெண் நடந்து சென்றாலும் மற்றவர் பார்வை, காமப்பார்வையாகவே இருக்கிறது. இது மாற வேண்டும். நிறைய பேர் என்னிடம் பட்டியலை கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சமூக ஊடகத்தில் 60 லட்சம் பேர் என்னை பின்தொடர்கின்றனர். வெளியே ஒரு கோடிக்கும் மேல் எனக்கு ஆதரவு தருவர். நான் கடந்த ஐந்தாண்டுகளில் நிறைய தொல்லைகளை அனுபவித்துள்ளேன். சிலரின் அமைதியை கலைக்க இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நடிப்பதற்கு சம்பளம் தருகிறார்கள்; நடிக்கிறோம். அவ்வளவு தானே இதில் எதற்கு மற்றவைக்கு சம்மதிக்க வேண்டும்.