'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் ஒரு யமண்டன் பிரேமகதா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் பெயிண்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் துல்கர். அறிமுக இயக்குனரான நவ்பல் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்காக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் திலீப்பின் நண்பரும் பிரபல இயக்குனருமான நாதிர்ஷா.
தற்போது, தமிழில் தனுஷ் தயாரிப்பில் அஜித் ப்ரம் அருப்புக்கோட்டை என்கிற படத்தை இயக்கி வரும் நாதிர்ஷா, ஏற்கனவே மலையாளத்தில் அமர் அக்பர் அந்தோணி, கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர்..
இயக்குனர் என்றாலும் அடிப்படையில் இசையில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ள நாதிர்ஷா, துல்கர் படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது அந்தப்படத்தின் கதாசிரியர்கள் பிபின் ஜார்ஜ் மற்றும் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஆகியோரின் வேண்டுகோளுக்காகத் தான். ஆம். நாதிர்ஷாவின் முந்தைய இரண்டு படங்களின் வெற்றிக்கு வித்திட்டவர்கள் இந்த இரட்டை கதாசிரியர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.