வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இப்போதுள்ள இளம் இயக்குனர்கள் தங்களது ஆரம்பகால படங்களில் கூட இருந்தவர்களையும், தங்களது படங்களில் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தவர்களையும் தங்களது அடுத்தடுத்த படங்களிலும் நல்ல கேரக்டர்கள் கொடுக்கின்றனர். அந்தவகையில் பா.ரஞ்சித்தை போல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் தற்போது ரஜினி படத்தில் தனது ஆஸ்தான நடிகர்களான விஜய்சேதுபதியையும் பாபி சிம்ஹாவையும் இணைத்துள்ளார் என்பது தெரிந்த விஷயம் தான்..
மேலும் இந்தப்படத்தில் அஞ்சலியும் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறாராம். கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் இந்த மூன்றுபேரும் இணைந்து நடித்திருந்தார்கள் என்பதும் அதில் அஞ்சலியின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் அவரின் ஆஸ்தான இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இருந்தாலும், ரஜினியின் முந்தைய இரண்டு படங்களில் அவர் தொடர்ந்து பணியாற்றிவிட்டார் என்பதால் அவரை மட்டும் விட்டுக்கொடுத்துவிட்டு அனிருத்தை இணைத்துக்கொண்டுள்ளார்.