தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் மே 11ம் தேதி வெளிவந்த 'இரும்புத் திரை' நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியைப் பெற்றது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இப்படம் தெலுங்கிலும் 'அபிமன்யுடு' என்ற பெயரில் வெளியாகி சுமார் 10 கோடி வரை லாபத்தைக் கொடுத்தது.
இப்போது இந்தப் படத்தின் இரு மொழிகளின் மொத்த வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 கோடி வசூலைப் பெற்றுள்ள இந்தப் படம் 16 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. மற்ற மாநிலங்களில் தெலுங்கு உட்பட 20 கோடி வசூலித்து இந்தியாவில் மட்டும் வசூலாக 50 கோடியைக் கடந்துள்ளது. வெளிநாடுகளில் சுமார் 10 கோடியை வசூலித்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலம் சுமார் 15 கோடி வரை கிடைக்கும். மற்ற உரிமைகளையும் சேர்த்தால் மொத்தமாக 80 கோடிக்கும் மேல் இந்தப் படம் மூலம் வருவாய் கிடைத்துள்ளது என்கிறார்கள்.
விஷாலின் இதற்கு முந்தைய பெரிய வசூல் படமாக 'சண்டக்கோழி' படம்தான் இருந்தது. அந்த வசூலை 'இரும்புத்திரை' முறியடித்துள்ளது. 'இரும்புத்திரை' வசூலை அக்டோபர் 18ல் வெளிவர உள்ள 'சண்டக்கோழி 2' படம் முறியடிக்குமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பு.