ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 120 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வில்லனின் நண்பனாக கலையரசன் நடிக்கிறார். இப்போது ரஜினியின் நண்பனாக மலையாள நடிகர் பஹத் பாசில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு வந்திருக்கிறார் ரஜினி. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் வருகிற 20ந் தேதி முதல் நடக்கிறது. என்றாலும் படக்குழுவினர் அங்கேயே தங்கி உள்ளனர். ரஜினி 19ந் தேதி டார்ஜிலிங் கிளம்பி போகிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பஹத் பாசிலும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. படத்தில் பகத் பாசில் நடிப்பது பற்றி இன்னும் சில தினங்களில் முறையான அறிவிப்பு வெளிவரும் என்று தெரிகிறது. பஹத் பாசில், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.