தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்ற மலையாள முன்னணி நடிகர் திலீப், மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது மோகன்லால் தலைமையில் நடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ள நிலையில் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக மலையாள சினிமா பெண்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த முடிவை எதிர்த்து 10க்கும் மேற்பட்ட முன்னணி நடிகைகள் சங்கத்திலிருந்து விலகினார்கள்.
இந்த நிலையில் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
'அம்மா' என்கிற அமைப்பு துவக்கப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் நடந்தபிறகு ஊடகங்களை சந்திக்காதது தவறு தான், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திலீப் கைது செய்யப்பட்டார் என்கிற தகவல் கிடைத்ததும், அப்போது இருந்த நிர்வாகிகளை வைத்து நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. ராஜினாமா செய்ய வைக்க வேண்டும், சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. நடிகர் சங்கம் இரண்டாக பிளவுப்படும் விதத்திலான ஒரு நிலைமை ஏற்பட்டது.
தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், இயக்குனர் சங்கத்திலிருந்தும் திலீப் நீக்கப்பட்டார் என்கிற தகவல் கிடைத்ததும் ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் இவ்விவரங்கள் விளக்கப்பட்டன. பல்வேறு வகையான விவாதங்கள் எழுந்தன. யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் அமைப்பிலிருந்து திலீப் நீக்கப்பட்டார்.
சங்க விதிகளின்படி அவ்வாறு செய்யக்கூடாது என்பதால் மீண்டும் கடந்த பொதுக்குழுவில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அவரும் நிரபராதியாகும் வரையில் சேர மாட்டேன் என்று தெரிவித்ததால் அவரை இணைக்க வேண்டாம் என்பதே சங்கத்தின் தீர்மானம். அவர் குற்றவாளி அல்ல எனத் தெரியவந்தால் அவரை இணைத்துக்கொள்ளத் தயார். வழக்கு முடிவுக்கு வந்தபிறகே திரும்ப இணைத்துக்கொள்வது சாத்தியம். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அம்மாவின் நிலைபாடு என்றார் மோகன்லால்.