ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்ரம், த்ரிஷா நடிப்பில், ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாமி படம் பெரிய வெற்றி பெற்றது. அதில் விக்ரம் நடித்த ஆரிச்சாமி கேரக்டரும், த்ரிஷா நடித்த புவனா கேரக்டரும் பெரிதாக பேசப்பட்டது. தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ஹரி இயக்குகிறார், சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஆரிச்சாமியாகவே விக்ரம் நடிக்கிறார். இரண்டாம் பாகத்தில் த்ரிஷா கேரக்டர் வில்லன்களால் கொல்லப்பட்டு விடுவதாக காட்சிகள் இருந்ததாம். இதனால் த்ரிஷாவுக்கு பிளாஷ்பேக்கில் ஒரு சில காட்சிகளே இருந்ததாம். ஆனால் அதில் நடிக்க த்ரிஷா மறுத்து விட்டார். தன்னை விட கீர்த்தி சுரேசுக்கு அதிக முக்கியத்தும் இருப்பதை அவர் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் த்ரிஷா ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை கொடுக்க முன்வந்தபோதும் நடிக்க மறுத்து விட்டார்.
த்ரிஷாவுக்காக காத்திருந்து அவரது காட்சிகளை மட்டும் படமாக்காமல் இருந்தார்கள். த்ரிஷா இந்த விஷயத்தில் உறுதியாக இருந்ததால் தற்போது வேறு வழியில்லாமல் த்ரிஷா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைத்து காட்சிகளை எடுத்து முடித்து விட்டார்கள். த்ரிஷாவின் தோற்றத்துக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ் தோற்றத்துக்கும் வித்தியாசம் இருப்பதால் அதை சரிக்கட்ட கதையில் சின்ன டுவிஸ்ட் ஒன்று வைத்திருக்கிறார்களாம்.