'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் 'மகாநதி' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வெளிவந்து நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இப்படத்தில் சாவித்ரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆன போது பலரும் அதை விமர்சித்தார்கள். ஆனால், படம் வெளிவந்த பின் சாவித்ரி கதாபாத்தில் அவரை விட வேறு யாரும் இந்த அளவிற்கு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று அனைவரும் பாராட்டினார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது, தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல இயக்குனர்களும், நடிகர், நடிகைகளும் கீர்த்தி சுரேஷை பாராட்டினார்கள். கீர்த்திக்கு மீண்டும் சாவித்ரி ஆக நடிக்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளதாம். மறைந்த நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்டிஆர் வாழ்க்கை வரலாறு தற்போது தயாராகி வருகிறது. அந்தப் படத்தில் நடிகை சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் கீர்த்தியை மீண்டும் அணுகி உள்ளார்களாம். என்டிஆர், சாவித்ரி இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ணா தயாரிக்கும் படம் என்பதால் கீர்த்தி எப்படியும் நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷ் மீண்டும் சாவித்ரி ஆக நடிக்க சம்மதிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.