மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற முதல் இந்தியர் மற்றும் 2வது சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த செஸ் வீரர் பிரக்னாநந்தா. இவருக்கு நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது... பிரக்னாநந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என அவரின் தந்தை ரமேஷ் பாபுவிடம் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்தார் கமல். அவரின் குடும்ப சூழலையும் தாண்டி நமக்கு சேர்த்த பெருமை. அவர்பால் நமக்கு இருக்கும் நம்பிக்கையையும், நன்றியினையும் அதிகரிக்க செய்திருக்கிறது. பிரக்னாநந்தா இந்தியா திரும்பியதும் கமல் அவரை சந்திக்க உள்ளார்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.