மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ரேணிகுண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சஞ்சனா சிங். அதன் பிறகு கோ, மயங்கினேன் தயங்கினேன், அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் படங்களில் நடித்தார். மும்பையை சேர்ந்த சஞ்சனா சிங்க சென்னை முகப்பேரில் வசித்து வருகிறார்.
சஞ்சனா சிங் தினமும் சைக்கிளில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்றும் அதுபோல சைக்கிளில் உடற்பயிற்சிக்காக சென்றார். அப்போது கீழ்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சைக்கிளிலேயே சென்றுவிட திட்டமிட்ட அவர் செல்போனில் கூகுள் மேப்பை ஆன் செய்து அதை சைக்கிளின் ஹேண்ட்ஃபாரில் உள்ள ஸ்டாண்டில் மாட்டிக் கொண்டு சென்றார். அண்ணா நகர் சிக்னல் அருகே வரும்போது பின்னார் மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சஞ்சனா சிங். கத்திக் கொண்டே சைக்கிளில் அவர்களை துரத்தினார். ஆனால் திருடன் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டான். இதுகுறித்து சஞ்சனா அண்ணா நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள். ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் பற்றிக்கூட எனக்கு கவலையில்லை. ஆனால் எனது பல டாக்குமெண்டுகள், வங்கி கணக்குகள், படங்கள், முக்கியமான தொடர்பு எண்கள் அதில் உள்ளது. என்று வருத்தத்துடன் கூறினார் சஞ்சனா சிங்.