இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெய்வதிருமகள் படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா ஸ்ரீநிவாஸ். நாடக நடிகையான இவர் இப்போது பிசியான திரைப்பட நடிகை. வழக்கு எண் படத்தில் திமிர் பிடித்த பணக்கார பெண்ணாக நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு ஆரோகணம், தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, பிரியாணி, நிமிர்ந்து நில், சரவணன் இருக்க பயமேன், உள்பட பல படங்களில் நடித்தார். நேற்று வெளியான டிக் டிக் டிக் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
டிக் டிக் டிக் படத்தில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து இரண்டு மலையாளம் படத்தில் கமிட்டாகியிருக்கிறேன். வெப் சீரீஸ்களிலும் நடிக்கிறேன். எவ்வளவு நேரம் திரையில் என் கதாபத்திரம் வரும் என்பது முக்கியமில்லை. என்ன கேரக்டர் என்பது முக்கியமில்லை, கதையை ஒட்டி நான் இருக்கின்றேனா என்பது தான் முக்கியம். படத்தில் 5 நிமிடம் வந்தாலும் என் பாத்திரம் பேசப்பட வேண்டும்.
சரிதா, சுஜாதா, படாபட் ஜெயலெட்சுமி இவர்கள் பல கதாபாத்திரத்தில் நடித்து தான் ஹீரோயினாக மாறினார்கள். ஒரு கதாநாயகனுக்கு வில்லன் தான் இருக்கனும் என்று நினைக்கிறார்கள். பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வில்லனை வில்லியாக மாற்றலாம். வில்லன்களை குறைத்து வில்லியை அதிகமாக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு வில்லியாக நடிப்பதில் ஆர்வம் அதிகம். காரணம் அதில்தான் நடிப்பை அதிகமாக வெளிப்படுத்த முடியும்.
திரைப்படத்துறை மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எல்லாத்துறையிலும் பெண்கள் சந்திக்கிற பிரச்சினைகளை திரைத்துறையிலும் சந்திக்கிறார்கள், ஆனால் திரைத்துறையை மட்டும் பெரிது படுத்துகிறார்கள். எனக்கு தெரிந்து திரைப்படத்துறையில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். வீட்டிலிருந்து கிளம்பியது முதல் படப்படிப்பு முடிந்து வீட்டில் கொண்டு வந்து விடுவது வரையிலான பாதுகாப்பு வேறெந்த துறையிலும் இல்லை. தெரிந்தே தவறு செய்து விட்டு திரைத்துறை சரியில்லை என்று ஆடையை களைந்து போராட்டம் நடத்துவதில் எந்த பயனும் இல்லை என்கிறார் ரித்திகா ஸ்ரீநிவாஸ்.