பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயம்ரவி நடித்த மழை படத்தில் தமிழுக்கு வந்தவர் ஸ்ரேயா. அதன்பிறகு ரஜினி, விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்தவர், தற்போது தமிழில் அரவிந்த்சாமியுடன் நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பாய் பிரண்ட் ஆண்ட்ரீவ் கோச்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து தெலுங்கில் வீரபோக வசந்த ராயலு மற்றும் ஒரு மல்டி ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில ஸ்ரேயா அளித்துள்ள ஒரு பேட்டியில், திருமணம் செய்து கொண்டபோதும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் 20 படங்களில் நடித்த பிறகே அதைப்பற்றி யோசிப்பேன். அந்த வகையில் திருமணம் எனது சினிமா வாழ்க்கைக்கு எந்தவொரு தடையையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரேயா.