ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக ஒரு படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது பூசனிக்காய் உடைத்து விட்டு சாமி கும்பிட்டு விட்டு கலைந்து செல்வார்கள். அஜித், விஜய் போன்றவர்கள் கடைசி நாளில் தங்கள் செலவில் படக்குழுவினருக்கு விருந்து வைப்பார்கள், புத்தாடைகள் கொடுப்பார்கள். இதையெல்லாம் தாண்டிச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன்.
அவரும், சமந்தாவும் நடிக்க பொன்ராம் இயக்கிய, சீமராஜா படத்தின் படப்பிடிப்புகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. படப்பிடிப்பு நடந்த இடத்திலேய பிரமாண்ட மேடை அமைத்து பேர்வெல் பார்ட்டி கொடுத்தார் சிவகார்த்திகேயன். லைட்மேன்கள், செட் அசிஸ்டண்டிலிருந்து தயாரிப்பாளர் வரை கூடியிருந்தனர். தங்கள் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அனேகமாக இந்த நிகழ்ச்சி ஏதாவது சேனலில் ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது.