ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2013-ம் ஆண்டு ஹிந்தியில் கங்கனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் குயின். இந்தப்படம் தற்போது தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது.
தமிழில் "பாரிஸ் பாரிஸ்", தெலுங்கில் "தட்ஸ் மஹாலக்ஷ்மி", கன்னடத்தில் "பட்டர்ப்ளை", மலையாளத்தில் "ஜாம் ஜாம்" என்றும் படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழில், காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்.
பாரிஸ் பாரிஸ் படத்தில் நடிப்பது குறித்து காஜல் கூறுகையில், "குயின் படத்தை பார்த்து அதில் நடித்த கங்கனாவின் நடிப்பில் மூழ்கி போனேன். ஒரு கம்பிளிப்பூச்சியில் இருந்து பட்டாம்பூச்சியாக மாறும் பெண்ணின் கதையே இப்படத்தின் கதைக்கரு. இப்படிபட்ட படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.
முதலில் "பாரிஸ் பாரிஸ்" படக்குழுவினர் இப்படத்திற்காக என்னை அணுகியபோது சிறு தயக்கத்துடனே இருந்தேன். ஆனால் தற்போது படம் வளர்ந்திருப்பதை பார்க்கையில் எனக்கு மிகவும் திருப்தியளிக்கும்படி உள்ளது. இப்படத்திற்காக ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு கதாநாயகிகள் நடிப்பது மிகவும் வரவேற்க்கதக்க ஒன்று. தமிழ் பதிப்பில் நான் கதாநாயகியாக நடித்திருப்பது பெருமையாகவுள்ளது.
இயக்குனர் ரமேஷ் அரவிந்த் ஒரு நடிகர் என்பதால், காட்சிகளை இயற்கையாக காட்டுவதிலும், ஒவ்வொரு காட்சிகளின் உள்ளுனர்வை சரியாக வெளிக்கொண்டு வருவதிலும், ரசிகர்களின் ரசனையை அறிந்து அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதிலும் எனக்கு உதவினார். அவருடன் பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி" என்றார்.