இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
மகாநதி படத்திற்கு பிறகு வழக்கமான கதாநாயகி வேடங்களில் நடிப்பதில் ஆர்வத்தை குறைத்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தற்போது அவர் கைவசம் சண்டக்கோழி-2, சாமி-2, விஜய்-62 ஆகிய படங்கள் உள்ளன. இதையடுத்து இன்னும் அவர் புதிய படங்களில் கமிட்டாகவில்லை.
முக்கியமாக, தமிழில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நடித்தபோதும், தெலுங்கில் அந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி வருகிறார் கீர்த்தி சுரேஷ். காரணம் அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளை பாடல் காட்சிகளில் கிளாமராக நடனமாட மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்.
அதனால்தான், மகாநதிக்குப்பிறகு முன்னணி தெலுங்கு நடிகர்களின் படவாய்ப்புகள் தேடிவந்த போதும் அந்த படங்களை நாசுக்காக தவிர்த்து விட்ட கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து அழுத்தமான கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேடி வருகிறார்.