விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் சி.வி.குமார். கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித், தினேஷை அறிமுகப்படுத்தியவர். விஜய் சேதுபதிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கியவர். தனது, திருக்குமரன் எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனத்தின் மூலம் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை உள்பட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். தற்போது 4ஜி, காதலும் கவுந்து போகும் படங்களை தயாரித்து வருகிறார்.
தயாரிப்பாளராக இருந்த சி.வி.குமார், மாயவன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். சந்தீப் கிஷன், ரெஜினா நடித்த இந்தப்படம் வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மீண்டும் ஒரு படம் இயக்குகிறார் சி.வி.குமார். இதற்கு, கேங்ஸ் ஆப் மெட்ராஸ் என்று டைட்டில் வைத்துள்ளார்.
கார்த்திக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஹரி டிபூசியா இசை அமைக்கிறார். இதில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. பாடல் பதிவுடன் படத்தின் பணிகள் நேற்று தொடங்கியது. இது சென்னையில் உள்ள அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பற்றிய கதை என்கிறார்கள்.