'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் சிலகாலம் அஞ்சலியின் மார்க்கெட் சரிந்து கிடந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய படங்களில் கமிட்டாகி பிசியான நடிகையாகிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், விஜய் ஆண்டனியுனுடன் நடித்த காளி படத்தை அடுத்து நாடோடிகள்-2, பேரன்பு, காண்பது பொய், லிசா மற்றும் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 2014-ல் தெலுங்கில் கீதாஞ்சலி என்ற ஹாரர் படத்தில் நடித்தார் அஞ்சலி. அந்த படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் அஞ்சலி தான் லீடு ரோலில் நடிக்கிறாராம்.
இந்த படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக காமெடியன் ஸ்ரீனிவாச ரெட்டி முதல் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு பதிலாக வேறு நடிகர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.