பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த வருடம், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதானார் நடிகர் திலீப். இந்த வழக்கில் சிறைசென்று 83 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ள நடிகர் திலீப், ஒரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் இந்த வழக்கிலிருந்து தன்னை முழுதும் வெளியே கொண்டுவர அல்லது தான் நிரபராதி என்பதை நிரூபிக்கும் விதமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
மேலும் இந்த வழக்கில் கேரள போலீசார் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள் என்றும், நடிகை கடத்தப்பட்டபோது எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட வீடியோவில் தனக்கு பல சந்தேகங்கள் இருப்பதாகவும் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார் திலீப்.
இந்தநிலையில் இந்த வழக்கு சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் இதனை சிபிஐயை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.