தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வளர்ந்து வரும் மலையாள நடிகை மேகா மேத்யூ. ஆனந்தம் படத்தில் அறிமுமான அவர், தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் படத்தில் நடித்து வருகிறார். மேகா நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவனந்தபுரத்திலிருந்து கோட்டையத்துக்கு காரில் சென்றார். காரை தானே ஓட்டிச் சென்றிருக்கிறார்.
கார் எர்ணாகுளம் அருகே உள்ள முளம்துருத்தி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பலத்த மழை பெய்திருக்கிறது. இதனால் மேகா காரை மெதுவாக ஓட்டிச் சென்றிருக்கிறார். ஆனால் எதிரே வேகமாக வந்த ஒரு கார் மேகா கார்மீது இடித்து விட்டு வேகமாகச் சென்றது. இதில் மேகா கார் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
பலத்த காயம் அடைந்த மேகா, காரை விட்டு வெளியே வர முடியாமல் சுமார் ஒரு மணி நேரம் போராடி இருந்திருக்கிறார். விபத்தை படம் எடுக்க வந்த பத்திரிகை புகைப்படக்காரர் தான் உள்ளே மாட்டிக் கொண்டிருப்பது நடிகை மேகா மேத்யூ என்பதையும், அவர் உயிருடன் இருக்கிறார் என்பதையும் கண்டுபிடித்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை காரிலிருந்து மீட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேகாவை மீட்ட பத்திரிகை புகைப்பட கலைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கடவுளின் கருணையால் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அனைவரின் பிரார்த்தனைக்கும் நன்றி என மேகா தெரிவித்திருக்கிறார்.