ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிறு பட்ஜெட் படங்களில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்தவர் சுபிக்ஷா. கடுகு படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ஆனாலும் படத்தின் நீளம் கருதி சுபிக்ஷாவின் காட்சிகள் குறைக்கப்பட்டது. அதனால் இயக்குனர் விஜய் மில்டன் தனது அடுத்த படமான கோலி சோடா இரண்டாம் பாகத்தில் சுபிக்ஷாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இதில் சுபிக்ஷா விஜய் மில்டனின் தம்பி பாரத் சீனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருகிற 14ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் மூலம் தனக்கு ஹீரோயினாக நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் சுபிக்ஷா. படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியதாவது:
படத்தில் என் கதாபத்திரத்தின் பெயர் இன்பவள்ளி, பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு ஜாலியான கதாபாத்திரம். படத்தை பற்றியும், என் கதாபாத்திரத்தை பற்றியும் விவாதிக்கும் போது விஜய் மில்டன் சார், இயல்பாக நடித்தாலே போதும், எந்த முன் தயாரிப்பு வேலையும் அந்த கதாபாத்திரத்துக்கு தேவையில்லை என்றார்.
கடந்த முறை கடுகு படத்தில் எனக்கும் அவருக்கும் ஒரு சில காட்சிகளே இருந்தன, அதை பற்றி நான் விஜய் மில்டன் சாரிடம் சொல்லி வருத்தப்பட்டேன். அதை விஜய் மில்டன் சீரியஸாக எடுத்து கொண்டார். கோலி சோடா 2 படத்திலும் எங்களை நடிக்க வைத்து, எனக்கும் பாரத் சீனிக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பாரத் சீனி ஆக்ஷன் காட்சிகளை விட காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். நல்ல வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். என்கிறார் சுபிக்ஷா.