இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் ஆகிய படங்களில் நடித்தும் சந்தீப் கிஷனுக்கு தமிழில் மார்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனாலும் தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படம் சந்தீப்கிஷன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கிறது. நரகாசூரன் படத்தை அடுத்து சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் சந்தீப் கிஷன். இந்த படத்தை கார்த்திக் ராஜு இயக்குகிறார். இவர் ஏற்கனவே திருடன் போலீஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கியவர்.
எஸ்.எஸ்.தமன் இசையமைக்கும் இந்தப்படத்துக்கு, பி.எஸ்.வர்மா ஒளிப்பதி செய்கிறார். இந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
சந்தீப்கிஷன் ஹீரோ என்பதால் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். தெலுங்குப்பதிப்பை தானே வாங்கிக் கொள்வதாக உறுதியளித்துள்ளாராம் சந்தீப் கிஷன்.