வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டுள்ள சமந்தா சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், அவர் நாகசைதன்யாவை காதலிப்பதற்கு முன்பு, பாய்ஸ் சித்தார்த்தை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து போனதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தனக்கு திருமணமான நிலையில், தனது பழைய காதலைப்பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமந்தா.
அதுகுறித்து அவர் கூறுகையில், மகாநதி படத்தில் நடித்து வந்தபோது, அந்த படத்தின் கதை என் வாழ்க்கையில் நடந்தது போலவே உணர்ந்தேன். அதாவது நானும் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன். பின்னர் அவரை விட்டு பிரிந்து விட்டேன். அப்படி பிரியவில்லையென்றால் என் வாழ்க்கையும் சாவித்ரி வாழ்க்கை போலாகியிருக்கும். எனது நல்ல நேரம்தான் நாக சைதன்யாவை சந்தித்தேன் என்று அந்த பேட்டியில் சமந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் முதலில் காதலித்த அந்த நடிகர் யார் என்பதை சமந்தா வெளிப்படையாக சொல்லாததால், அவரது இணைய பக்கத்தை தொடர்பு கொண்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.