ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா', ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் விஞ்ஞானி ஆகிய படங்களை தயாரித்து வரும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் படநிறுவனம் அடுத்து புதியபடத்தை தயாரிக்கிறது.
'அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இந்தப் படத்தை இயக்குகிறார். குமுளியில் இந்த படத்துக்கு பூஜை போட்ட புகைப்படத்துடன் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
'அருவி' படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரேமண்ட் இந்த படத்திலும் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார். 'மேயாத மான்' படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனை வைத்து படம் தயாரிக்க சிவகார்த்திகேயன் தரப்பு முன் வந்ததற்கு அருவி என்ற வெற்றிப்படம் கொடுத்தவர் என்பது மட்டும் காரணமில்லை.
அருண் பிரபு புருஷோத்தமன் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவினராம். அதன் காரணமாகவே தானே அழைத்து அவரிடம் கதை கேட்டு கமிட் பண்ணினாராம்.