இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
கடந்தாண்டு இறுதியில் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்த படம் "அருவி". அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்த அதிதி பாலனுக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்தப்படத்தை அடுத்து வேறு எந்த படத்திலும் கமிட்டாகாமல் உள்ளார் அதிதி. அதேசமயம், அருண் பிரபுவின் அடுத்தப்படம் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில் அருண் பிரபுவின் அடுத்தப்படத்திற்கான பூஜை நடந்துள்ளது. குமுளி, லோயர் கேம்ப் பின்னணியில் படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இந்தப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்டி.ராஜா, தனது 24 ஏஎம்.ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை, யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இல்லை.