டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் மற்றும் பலர் நடிக்க புதிய படம் ஒன்று விரைவில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதத்தில் லண்டனில் ஆரம்பமாக உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில் ஆகிய வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
சூர்யாவுக்கு தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வரவேற்பு உள்ளது. அதனால், அந்த ரசிகர்களையும் கவரும் விதத்தில் மலையாளத்திற்காக மோகன்லாலையும், தெலுங்கிற்காக அல்லு சிரிஷையும் படத்தில் நடிக்க வைக்கிறார்கள். சூர்யாவின் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக சாயிஷா நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி நடித்துள்ள 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். அதனால், கண்டிப்பாக சூர்யா ஜோடியாக அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம். அண்ணன், தம்பி இருவரும் அடுத்தடுத்து ஒரே நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பது வழக்கம். அதனால், அது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் 100 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம். ஆங்கிலப் படம் அளவிற்கு படத்தை எடுக்க கே.வி.ஆனந்த் முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள். சூர்யா நடிப்பில் முதன் முதலில் 100 கோடி செலாவில் தயாராக உள்ள படம் இது.