தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால், சமந்தா, அர்ஜுன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் விஷால் நடித்து வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்துள்ள படமாகவும், பெரிய வெற்றியைப் பெற்ற படமாகவும் அமைந்துள்ளது. இது பற்றிய தகவலை விஷாலே இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அபிமன்யுடு' பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், 'இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் எண்ணம் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
“இரும்புத்திரை' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என படம் வெளிவருதவற்கு முன்பே யோசித்துவிட்டோம். இன்னும் அதற்கான கதையை இயக்குனர் மித்ரன் எழுத வேண்டும். டெக்னாலஜி நமக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி மித்ரனிடம் பல விஷயங்கள் இருக்கின்றன. 'இரும்புத்திரை' படத்தில் அதை அவர் 20 சதவீதம் தான் தெரிவித்திருக்கிறார். இந்தக் காலத்திற்குத் தேவையான ஒரு படம் 'இரும்புத்திரை' என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை படத்தின் தெலுங்குப் பதிப்பான 'அபிமன்யுடு' வரும் ஜுன் 1ம் தேதி வெளியாகிறது.