ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காலா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்த புதிய படத்துக்கான நட்சத்திர தேர்வுகள் ஏறக்குறைய இறுதிகட்டத்தை எட்டியுள்ளநிலையில், லொகேஷன் தேர்வு செய்யும் வேலைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 2-வது வாரத்தில் தொடங்குகிறது. இப்படத்தின் முக்கிய காட்சிகள் டேராடூன், டார்ஜிலிங் போன்ற பகுதிகளில் நடக்கவுள்ளது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சில வாரங்களுக்கு முன் திருநாவுக்கரசு ஒப்பந்தமாகியுள்ள நிலையில் அவருடன் இமயமலை அடிவாரத்துக்கு சென்று லொகேஷன் பார்த்துவிட்டு வந்துள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.
மெர்க்குரி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக சில வாரங்கள் இமயமலைப் பகுதியில் தங்க இருக்கிறார் ரஜினி.
அப்போது, படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்தமான இமயமலையில் உள்ள முக்கிய இடங்களை சுற்றிப் பார்க்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அங்குள்ள தனியார் ஹெலிகாப்டர் புக் செய்யப்பட்டிருக்கிறது.