ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜித் பற்றி எந்த ஒரு தகவலைச் சொன்னாலும் அதை அஜித் ரசிகர்கள் உடனே கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். ரசிகர் மன்றம் வேண்டாம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு வேண்டாம் என பல வருடங்களாக ஒரு வைராக்கியத்துடன் இருந்து வரும் அஜித் எங்காவது வெளியில் செல்லும் போது ரசிகர்கள் வந்து சந்தித்தால் அவர்களிடம் துளியும் கோபப்படாமல் முடிந்தவரை அனைவருடனும் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்.
அதிலும் செல்பி யுகத்தில் பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைப்படுவதும் அதிகமாகிவிட்டது. அதற்கும் முகம் சுளிக்காமல் அனைவருடனும் எடுத்துக் கொள்கிறார் என ஒரு திரையுலகப் பிரபலம் தெரிவித்திருக்கிறார்.
விஸ்வாசம் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார் அஜித். அப்போது அவருடன் விமான பைலட் முதல் சாதாரண பயணி வரை சுமார் 200 பேர் வரை செல்பி எடுத்துக் கொண்டார்களாம். இது பற்றிய தகவலை அவருடன் பயணித்த இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.
“கேப்டன்கள் முதல் பயணிகள் வரை 100க்கும் மேல் 200 பேர் வரை அன்பான அஜித்துடன் இன்று செல்வி எடுத்துக் கொண்டனர். சாதாரண மனிதர்களிடமும் மிகவும் அன்பாகவும், எளிமையான அணுகுமுறையுடனும் அவர் பழகியது சிறப்பு,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.