இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
மலையாள நடிகை இனியா, தமிழில் சில சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தார் என்றாலும் வாகைசூடவா படம் அவரை பெரிய அளவில் பேச வைத்தது. அதன் பிறகு அம்மாவின் கைபேசி, மவுன குரு, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், மாசானி, புலிவால், நான் சிகப்பு மனிதன். உள்பட பல படங்களில் நடித்தார். அவர் நடித்துள்ள பொட்டு படம் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் இனியாவின் தங்கை தாராவும் நடிக்க வந்திருக்கிறார். வருகிற 25ந் தேதி வெளியாகும் கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்கய்யா... என்ற படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்த படத்தில் நான் மன்சூர் அலிகானுக்கு மகளாக நடிக்கிறேன். அவரைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது. போக போக நல்ல நண்பர் ஆகிவிட்டார். நிறைய அறிவுரை சொன்னார். கூட்டத்தில் நடிக்க தயங்கினேன். என் தயக்கத்தை உடைத்தது அவர் தான். படத்தின் இறுதிக்காட்சியில் ஹீரோவுடன் நான் ஓட வேண்டும். மரங்களில் கேமராக்கள் வைத்து எடுத்தார்கள். பாதையில் கல், குழி எல்லாம் இருக்கும். இயல்பாக இருக்க வேண்டும் என்று அப்படியே ஓடினோம். நாய் துரத்தி கூட நான் ஓடியது கிடையாது. அந்த காட்சிக்காக ஓடியது மறக்க முடியாத சம்பவம்.
தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். என்று அக்கா இனியா அறிவுரை கூறியிருக்கிறார். அவரைப்போல நானும் சினிமாவில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் தாரா.